2வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினமும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 21 காசுகள் உயர்ந்து 99.36 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து 94.45 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து ரூ.99.58-க்கு விற்பனையாகிறது. அதே சமயம் ஒரு லிட்டர் டீசலின் விலை 29 காசுகள் அதிகரித்து ரூ.94.74-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools