2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை மார்ச் மாதம் தொடங்க பிசிசிஐ திட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என ஐபிஎல் சேர்மன் அருண் துமல் தெரிவித்துள்ளார்.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இந்த வருட ஐ.பி.எல் தொடர் நடைபெறும் சமயத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும் என ஐ.பி.எல். சேர்மன் அருண் துமல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரை மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

நடப்பு ஆண்டு ஐ.பி.எல் தொடர் அட்டவணை இரு கட்டங்களாக வெளியாகும் என கூறப்படுகிறது. முதல் அட்டவணையை பி.சி.சி.ஐ விரைவில் அறிவிக்கும் எனவும், பாராளுமன்ற பொதுத்தேர்தல் அட்டவணை வெளியானதும் 2வது கட்ட அட்டவணை வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools