5 மாநிலங்களில் 8 கலெக்டர்கள், 12 போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிட மாற்றம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் தேர்தல் ஆணைய மறுஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், சுக்பீர்சிங் சந்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு, கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 5 மாநிலங்களை சேர்ந்த 8 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் 12 போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியானது. அவர்கள் தங்களது இளைய அதிகாரியிடம் உடனடியாக பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மாற்றப்பட்டவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிக்க, ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பட்டியலை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவும் அந்தந்த மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools