நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மற்றும் கயல்விழி இணையருக்கு இன்று (மே 21) இனியதொரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கயல்விழி சீமானுக்கு, இன்று காலை அறுவை சிகிச்சை மூலம் இந்த அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். தற்போது தாயும் சேயும் முழு ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஏற்கனவே சீமான் – கயல்விழி தம்பதியினருக்கு மாவீரன் என்ற 5 வயது மகன் இருக்கும் சூழலில், தற்போது அவர்களது இல்லத்திற்குப் புதிய வரவாக வந்துள்ள இந்தக் குட்டித் தேவதைக்கு நாம் தமிழர் கட்சியின் தம்பிகள், திரைத்துறையினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் அன்பையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.