X

நடிகர் பார்த்திபன் கருத்துக்கு நடிகை திரிஷா கண்டனம்

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் திரிஷாவை மறைமுகமாக தாக்கி நடிகர் பார்த்திபன் பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சியில், த்ரிஷாவின் புகைப்படம் காண்பிக்கப்பட்டு பார்த்திபனிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு,” இந்த குந்தவையை கொஞ்ச நாள் வீட்டிலேயே குந்தவைக்கிறது (உட்கார வைப்பது) நல்லதுங்க. வெளியே வராம பார்த்துக்கோங்க. அதனால நிறைய பிரச்சனைகள் உண்டாகமா பார்த்துக்கலாம். அதனால சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர, அந்த கவிதையை சொல்லாம இருக்கிறது பெட்டர்ன்னு நினைக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

பார்த்திபனின் கருத்துக்கு, நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து த்ரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்தாவது:-

ஒரு மைக்ரோ போன், ஒரு கருத்தை அறிவார்ந்தது அல்லது நகைச்சுவையானது என மாற்றிவிடாது. அது முட்டாள்தனத்தை உரக்கச் சொல்ல மட்டுமே உதவும். அறிவு இல்லாமல் பேசப்படும் தரம் குறைந்த வார்த்தைகள், அவை யாரை நோக்கி வீசப்படுகிறதோ அவரை விட, பேசுபவரின் தரத்தையே அதிகம் வெளிப்படுத்திவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திரிஷா கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்துள்ளார்.