தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னையில் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்த உள்ளனர். இதில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அரசு உயரதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர் கலந்துரையாடுகின்றனர்.
தலைமைத் தேர்தல் ஆணையரிடம் தேர்தலை வெளிப்படையாகவும், அமைதியாகவும் நடத்த அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.