X

சென்னையில் மின்சார ரயில் மோதி இருவர் பலி!

சென்னையில் ரயில் நிலையங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் யாரும் தண்டவாளத்தை கடக்கக்கூடாது என்றும் நடைமேம்பாலங்களை பயன்படுத்தவேண்டும் என்றும் ரயில்வே தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. எனினும் அபாயத்தை உணராமல் சிலர் தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை-கிண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று தண்டவாளத்தை கடக்க சிலர் முயன்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் ரயிலின் படிக்கட்டில் பயணம் செய்த பயணிகள் 5 பேர் பரங்கிமலை ரயில் நிலையத்தின் தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.