X

தீபிகா படுகோனே- ரன்வீர் திருமண தேதி அறிவிப்பு

ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட பத்மாவத் படத்தில் ராணியாக நடித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அதே படத்தில் தன்னுடன் நடித்த ரன்வீர் சிங்கை காதலிப்பதாக மும்பை திரையுலக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இதை இருவரும் மறுக்கவில்லை. இந்நிலையில் தீபிகா படுகோனே ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ளும் தேதியை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார்.

திருமண அழைப்பிதழ் வடிவில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்கள் குடும்பாத்தாருடன் ஆசிகளுடன் எங்கள் திருமணம் நவம்பர் 14,15 தேதிகளில் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இத்தனை காலமாக எங்கள்மீது நீங்கள் தொடர்ந்து காட்டிவரும் அன்புக்கு நன்றி தெரிவிப்பதுடன், இந்த வாழ்க்கை தொடங்கப்போகும் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேஎன்’ என தீபிகா படுகோனே குறிப்பிட்டுள்ளார்.