X

சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகளின் பட்டியல் வெளியீடு

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் நாளை (15.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அம்பத்தூர் இன்டஸ்டிரியல் எஸ்டேட்: நியூ டைனி செக்டர், போஸ்ட் ஆபீஸ் ரோடு 2வது மற்றும் 5வது தெரு, அம்பிட் ஐடி பார்க் ரோடு, 2வது மெயின் ரோடு ஸ்பூத் பேஸ் ஆகிய இடங்கள்.

அம்பத்தூர் சிட்கோ: மாரியம்மன் கோவில் தெரு, குலக்கரை தெரு, கண்ணன் கோவில் தெரு, ஆவின் பிரதான சாலை, ஈபி சாலை 1 முதல் 4வது தெரு, வடக்கு கட்டம் 31ஏ சாலை, வடக்கு கட்டம் 12 மற்றும் 13வது தெரு, கொரட்டூர் டைனி செக்டர் ஆகிய பகுதிகள்.