X

வட சென்னைப் பகுதிகளில் வெள்ளத் தடுப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ்

வட சென்னைப் பகுதிகளில் வெள்ளத் தடுப்புப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவொற்றியூர், மணலி மற்றும் மாதவரம் ஆகிய முக்கிய குடியிருப்புப் பகுதிகளின் வடிகால் நதிகளாக விளங்கும் கசிமேடு தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம், கார்கில் நகர் பக்கீங்ஹாம் கால்வாய், பர்மா நகர் கொசஸ்தலையாறு உபரிநீர் கால்வாய் மற்றும் ஆமுல்லாவாயல் பகுதியில் உள்ள புழல் உபரிநீர் கால்வாய் ஆகிய இடங்களை அவர் நேரில் சென்று ஆய்வு செய்து, நீர் தடையின்றி செல்ல விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.