இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 9 தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் விசைப்படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்கக் மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து நடைபெறும் இத்தகைய கைது நடவடிக்கைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்திப் படகுகளைக் கரையில் நிறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.