வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த பல ஆண்டுகளாக அதிமுகவில் பணியாற்றிய வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் முக்கிய பொறுப்பாளராக இருக்க கூடிய சோலை குமாரன் என்கிற வீரபாண்டி குட்டி, 10 ஆண்டுகளாக பல்வேறு அரசியல்,மக்கள் பணிகளை மேற்கொண்டு மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய நன்மதிப்பை பெற்று உள்ளார்.
தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிட தற்போது அதிமுகவிலிருந்து விலகி சசிகலா முன்னிலையில், அவரது அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
துரோகிகளையும் எதிரிகளையும் அவர்களின் எண்ணங்களை தவிடு பொடியாக்கும் விதமாக வீரபாண்டிய சட்டமன்ற தொகுதியில் அறிவிக்கப்படும் வேட்பாளர்களின் வெற்றிக்காக தொடர்ந்து தேர்தல் பணிகள் மேற்கொண்டு வெற்றி பெற அனைத்து பணிகளையும் மேற்கொள்ள உள்ளதாக சோலைக்குமாரன் என்கிற குட்டி தெரிவித்து உள்ளார்.
மேலும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் விருப்ப வேட்பு மனு அளித்துள்ளார்.