X

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ரோஜர் பின்னி விலகல்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பின்னி, தனது பதவியில் இருந்து விலகியுள்ளதால், துணைத் தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக பொறுப்பேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த தலைவருக்கான தேர்தல் நடைபெறும் வரை ராஜீவ் சுக்லா துணைத் தலைவராக நீடிப்பார் எனத் தெரிகிறது.

லோதா கமிட்டி பரிந்துரையின்படி உச்சநீதிமன்றம் பிசிசிஐ உறுப்பினர்கள் தேர்வுக்கான விதிமுறைகளை வகித்துள்ளது. அதன்படிதான் பிசிசிஐ செயல்பட்டு வருகிறது. லோதா கமிட்டி பரிந்துரையின்படி 70 வயதிற்கு உட்பட்டோர் தேர்வு செய்யப்பட்டால், பதவிக்கான தகுதி காலம் முழுவதும் பதவியில் நீடிக்கலாம்.

மேலும், தொடர்ந்து 6 வருடங்கள் பதவியில் நீடிக்கலாம் அல்லது 9 ஆண்டுகள் இடைவெளி விட்டு பதவி வகிக்கலாம். 9 ஆண்டுகள் நிறைவடைந்தால் அவர்கள் பதவியை கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு ரோஜன் பின்னி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக Dream11 இருந்து வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தால் Dream11 அதன் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. இதனால் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ஜெர்சி ஸ்பான்சர் இல்லாமல் விளையாடும் எனத் தெரிகிறது.