X

சென்யார் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

* மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது.

* சென்யார் புயல் இன்று காலை 5.30 மணியளவில் உருவானது.

* அடுத்த 24 மணி நேரத்தில் புயலின் தீவிரத்தை தக்கவைத்து பின்னர் படிப்படியாக வலுவிழக்கும்.

* சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.