சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (13.12.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அதன்படி, குன்றத்தூர்: திருநீர்மலை மெயின் ரோடு, மகா நகர், குன்றத்தூர் கோவில் வேவ் , போலீஸ் குடியிருப்புகள், சரண்யா நகர், ஏஆர் எடைபாலம், சர்மா நகர், மேத்தா நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் நாளை நிறுத்தப்படும்.