X

ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செய்வது யார் ? – எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியா ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்த மறுப்பதாகச் சொல்லி டிரம்ப் நிர்வாகம் 50 சதவிகித வரி விதித்துள்ளது. சரி, ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வது யார்? இந்திய அரசா? அல்லது பிரதமர் மோடியின் நண்பரா?

யாருடைய விசுவாசத்துக்காக இந்த பெரு நஷ்டத்தை இந்திய தொழில்கள் சந்திக்கின்றன. இந்தியாவின் சுதந்திர கொள்கைகள் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும் டிரம்பையும், நாட்டின் நலனைவிட தனது நண்பர்களின் நலனில் அக்கறை செலுத்தும் மோடியையும் ஒருசேர எதிர்க்க வேண்டிய நேரமிது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.