X

பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் ? – மக்களவையில் எம்.பி கனிமொழி கேள்வி

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* புல்வாமா தாக்குதல் தொடர்பான கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.

* மும்பை தாக்குதல் நிகழ்ந்தபோது பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர்.

* பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்.

* விஸ்வகுரு என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி தீவிரவாத தாக்குதலின்போது என்ன செய்தார்.

* பஹல்காம் தாக்குதலுக்கு மோடி பொறுப்பேற்றாரா?

* RAW மற்றும் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது.

* மக்களை பாதுகாப்பதில் பா.ஜ.க. அரசு தோல்வி அடைந்து விட்டது.

* அரசாங்கம் உங்களிடம் தான் உள்ளது. மக்களை காக்க தவறி விட்டீர்கள்.

* கேள்வி எழுப்பினாலே தேச விரோதி என முத்திரை குத்துவதா?

* அரசியல் என்ற பெயரில் நாட்டை ஏன் பிளவுபடுத்த நினைக்கிறீர்கள்.

* தேர்தலின்போது தமிழர் பெருமை பேசும் பா.ஜ.க. அரசு கீழடி அறிக்கையை ஏற்க மறுக்கிறது.

* தேர்தல் நேரத்தில் மட்டும் சோழர்கள், தமிழர்கள் மீது பாசம் ஏற்படுகிறது.

* தமிழர்களின் பெருமை மற்றும் கலாச்சாரத்தை ஒவ்வொரு தேர்தலின்போதும் பா.ஜ.க. கண்டறிந்து விடுகிறது.

* விக்ரம் மிஸ்ரி என்ற அதிகாரியை அவதூறு செய்தபோது என்ன செய்தீர்கள்.

* கர்னல் சோபியா குரேஷி குறித்து பேசிய பா.ஜ.க. அமைச்சர் மீது எடுத்த நடவடிக்கை என்ன?

* போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது நான் என டிரம்ப் 25 முறை கூறுகிறார்.

* இதுதான் பா.ஜ.க.வின் வெளியுறவுக் கொள்கையா?

* வெளியுறவுக் கொள்கையில் மத்திய பா.ஜ.க. அரசு சாதித்தது என்ன?

* வெளியுறவுக் கொள்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது.

* ஆணையத்தின் உதவி, சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக இல்லாமல் ஜனநாயகத்தின் மூலம் தேர்தல் வெற்றி இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.