ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது குறித்து கிரிஸ் வோக்ஸ் விளக்கம்

ஐ.பி.எல். 14-வது சீசனின் 2-வது பகுதி ஆட்டங்கள் வருகிற செப்டம்பா் 19-ம்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் நடைபெறுகிறது. இந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இத்தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஆர்சர் ஆகியோர் ஏற்கனவே, விலகிவிட்டார்கள். சமீபத்தில், சன்ரைசர்ஸ் அணியிலிருந்து ஜானி பேர்ஸ்டோவ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலிருந்து கிறிஸ் வோக்ஸ் மற்றும் பட்லர், தாவித் மலான் ஆகிய வீரர்களும் ஐ.பி.எல். போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டிய நிலைமை உள்ளது. இதனால், ஐ.பி.எல். போட்டியிலிருந்து இவர்கள் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்,  கிறிஸ் வோக்ஸ்-க்குப் பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பென் துவார்ஷியஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில், ஐ.பி.எல். 2021 போட்டியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து கிறிஸ் வோக்ஸ் கூறியதாவது,“ டி20 உலகக் கோப்பை அணியில் நான் இடம்பெறுவேன் என எனக்குத் தெரியாது. ஐ.பி.எல். போட்டியின் அட்டவணை மாற்றப்பட்டது.

டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் போட்டி என அடுத்தடுத்து முக்கியமான போட்டிகள் உள்ளது. இதனால், குறைந்த நாட்களில் நிறைய ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலைமை ஏற்படும். ஐ.பி.எல். போட்டியில் விளையாட வேண்டும் என்று எனக்கும் விருப்பம்தான். ஆனால், ஏதாவது ஒரு போட்டியிலிருந்து விலக வேண்டிய நிலைமை உள்ளது. இந்த முடிவை எடுக்காவிட்டால் எந்த போட்டியிலும் விளையாட முடியாத நிலைமை ஏற்படும்” என கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools