கார்கில் வெற்றி தினம் – டெல்லி போர் நினைவு சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை

காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் படையினர், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சுமார் 200 கி.மீ. வரை ஆக்கிரமித்தனர். இந்திய நிலைகளையும் கைப்பற்றியது. இதையடுத்து இந்திய ராணுவம் மிகப்பெரும் தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்தது.

இந்தப் போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கார்கில் வெற்றி தினத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கமும் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கார்கில் வெற்றி தினத்தின் 20ம் ஆண்டு விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. கார்கில் போர் வெற்றி தினமான இன்று, டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து ராணுவ வீரர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools