காஷ்மீர் எல்லையில் துப்பாக்கி சூடு – 2 பாகிஸ்தான் வீரர்கள் மரணம்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

அவ்வகையில் காஷ்மீர் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் ஊரி மற்றும் பந்திப்பூர் செக்டார்களில் நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனர்.

இதேபோல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தேவா செக்டாரிலும், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news