கேரளா முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய ராகுல் காந்தி

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த பலத்த மழையால் கோட்டயம், திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.யாக உள்ள வயநாடு தொகுதியும் பாதிப்பை சந்தித்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ராகுல்காந்தி சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள கொச்சி இல்லத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.

அப்போது கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு சீரமைப்பு, நிவாரணம், தேசிய நெடுஞ்சாலையில் இரவுநேர போக்குவரத்து தடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பினராயி விஜயனுடன் ராகுல் காந்தி ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது தொகுதியில் வெள்ள நிவாரண பணியை துரிதப்படுத்துமாறு ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools