X

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

பீகார் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் நிதிஷ் குமார். மத்திய பாஜக அரசில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி அங்கம் வகித்து வருகிறது.

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் இன்று 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில், பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பீகார் மாநில முதல் மந்திரியும் எனது நண்பருமான நிதிஷ் குமார்ஜிக்கு வாழ்த்துக்கள். பிரபல தலைவரான அவர் பீகாரின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் முன்னணியில் உள்ளார். அவர் நீண்ட ஆரோக்கியமாக வாழ பிரார்த்தனை செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.