X

பேளூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் பிரதமர் மோடி வழிபாடு!

பிரதமர் மோடி இருநாள் பயணமாக மேற்கு வங்காளம் மாநில தலைநகரம் கொல்கத்தாவுக்கு நேற்று மாலை சென்றார். கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கொல்கத்தா சென்ற பிரதமர் மோடி ராஜ்பவனில் தங்கியுள்ளார்.

இதற்கிடையே, ராஜ்பவனில் தங்கிய பிரதமர் மோடியை அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம் ஹவுராவில் உள்ள பேளூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைமை அலுவலகத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் உருவச்சிலையை வணங்கி வழிபட்டார் பிரதமர் மோடி.

அதன்பின்னர், மடத்தில் நடைபெற்ற பஜனையிலும் கலந்து கொண்டார். அங்கிருந்த் சாதுக்களுடன் கலந்துரையாடினார்.