X

வைபவ் படத்தில் இணைந்த பூர்ணா

வைபவ் நடிப்பில் ஆர்.கே.நகர் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர காட்டேரி, சிக்ஸர் உள்ளிட்ட படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.

தற்போது நிதின் சத்யா தயாரிப்பில் இரண்டாவது படமாக உருவாகும் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கும் இந்தப் படத்தில் வாணி போஜன், ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பூர்ணா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

வைபவ், பூர்ணா, ஈஸ்வரி ராவ் ஆகிய மூன்று பேருமே போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

சஸ்பென்ஸ் கலந்த திகில் படமாக உருவாகும் இதன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.