X

ஈரானுக்கு மிக அருகில் நீர்மூழ்கி போர் கப்பலை நிலைநிறுத்திய பிரிட்டன்!

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடுவதாக அறிவித்ததால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, 48 மணி நேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்கவிட்டால், அந்நாட்டு மின் கட்டமைப்புகள் தாக்கி அழிக்கப்படும், என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கும் விதத்தில், அமெரிக்காவுக்கு சொந்தமான எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை அழிப்போம் என்று எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, ஈரான் எல்லையில் இருந்து 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரிட்டனின் டியாகோ கார்சியா தீவில், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ராணுவப் படையை நிலைநிறுத்த பிரிட்டன் அனுமதி அளித்தது. இதனால் இந்த தீவு மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பிரிட்டன் கண்டனம் தெரிவித்ததோடு, அரபிக்கடலில் தனது அதிநவீன போர் கப்பலை நிலைநிறுத்தி உள்ளது.

எச்.எம்.எஸ் ஆன்சன் என்ற இந்த பிரிட்டன் நீர்மூழ்கி போர் கப்பலில் அமெரிக்காவின் டோமாஹாக் க்ரூஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இது அரபிக்கடலில் இருந்தபடியே ஈரானின் இலக்குகளைத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல், தற்போது வட அரபிக் கடலில் ஈரானுக்கு மிக அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், போர் பதற்றம் அதிகரித்துள்ளது.