முன்னாள் மேல்-சபை எம்.பி.யான சுப்பிரமணிய சுவாமி, ராமர் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்க தான் விடுவித்த கோரிக்கை குறித்து விரைவாக முடிவு செய்ய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சுப்பிரமணிய சுவாமியின் மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர். பின்னர் இந்த வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.