X

துறைமுகங்களை முற்றுகையிட்ட அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!

ஈரான் துறைமுகங்களை அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட்டுள்ளதால், அதற்குப் பதிலடியாக உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீர்சந்தியை (Strait of Hormuz) மீண்டும் மூடுவதாக ஈரான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது.

லெபனான் போர்நிறுத்த உடன்படிக்கையைத் தொடர்ந்து இந்த நீரிணை தற்காலிகமாகத் திறந்துவிடப்பட்ட நிலையில், அமெரிக்காவின் முற்றுகை தொடர்வதால் தற்போது மீண்டும் மூடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கப்பல்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை இந்தத் தடை நீடிக்கும் என்று ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) எச்சரித்துள்ளது.

அதே சமயம், ஈரானுடனான ஒப்பந்தம் முழுமையாக நிறைவுபெறும் வரை இந்தப் பொருளாதார மற்றும் கடற்படை முற்றுகை தொடரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த மோதல் போக்கினால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.