எம்.டி.இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் டிபிஏ பிரைவேட் லிமிடெட், தனதுவளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகசென்னையில் தனது செயல்பாடுகளை பெருமளவில் விரிவுபடுத்துவதை பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. மேலும், தென்னிந்தியா முழுவதும் மருத்துவக் காப்பீடு செயல்பாடுகளில் நிர்வாகத்திறனை வலுப்படுத்துவதற்கு இந்நிறுவனம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கு சான்றாக இது இருக்கிறது.
IRDAI-ஐ பதிவு பெற்ற மூன்றாம் தரப்பு நிர்வாக சேவை நிறுவனமான எம்.டி.இந்தியா, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் காப்பீடுத் துறையில் சிறப்பாக இயங்கி வருகிறது. பாலிசிதாரர்கள், காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு கோரிக்கை சேவைகள், மருத்துவமனை ஒருங்கிணைப்பு மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவை மிகவும் அவசியமாகியுள்ள இக்காலத்தில் இந்த விரிவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 23 அலுவலகங்கள் மற்றும் சென்னையில் 4 அலுவலகங்களுடன் இயங்கி வரும் எம்.டி.இந்தியா டிபிஏ இம்மாநிலத்தில் தனது சேவைக்கான செயற்பரப்பை மேலும் ஆழப்படுத்தி வருகிறது. பாலிசிதாரர்களின் மருத்துவக் காப்பீடு கோரிக்கைகளை பரிசீலித்து தீர்வு வழங்கும் ஐந்தாவது ‘சிறப்பு சேவை மையம்’ மிக விரைவில் சென்னையில் தொடங்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் எம்.டி.இந்தியாவின் பயணம் அண்ணா சாலையில்(மவுண்ட் ரோடு)தொடங்கப்பட்ட முதல் கிளை அலுவலகத்துடன் ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து குணா காம்ப்ளக்ஸ் மற்றும் ரஹேஜா டவர்ஸ் ஆகிய இடங்களிலும் தனது அலுவலகங்களை நிறுவிய இந்நிறுவனம், இப்பகுதியில் காப்பீடு சேவைகளுக்கான தேவைகள் தொடர்ந்து அதிகரித்ததால், கீழ்ப்பாக்கத்தில் முதலில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் அலுவலகம் மூன்று பிரத்யேக அலுவலகங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் உள்ள என்ஆர்சிஎஸ் டவரில் தற்போது திறக்கப்பட்டுள்ள புதிய கிளை, மருத்துவம் மற்றும் காப்பீடுச் சேவைகளுக்கான முதன்மை மையமாக வளர்ந்து வரும் சென்னையின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.
ஆரம்பத்தில் சுமார் 100 ஊழியர்களுடன் தொடங்கிய எம்.டி.இந்தியாவின் சென்னை பிரிவின் செயல்பாடுகள், தற்போது 450-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக்கொண்டதாக சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிறுவனம் இழப்பீடு கோரிக்கைகளை பரிசீலித்து தீர்வு வழங்குவதற்காக120-க்கும் மேற்பட்ட மருத்துவர்களையும் பணியில் சேர்த்துள்ளது. இது விரைவான சேவை, சிறப்பான மேலாண்மை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிரமமற்ற எளிதான ஆதரவு ஆகியவற்றைமேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விரிவாக்கம் குறித்து எம்.டி.இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் டிபிஏ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சமீர் போன்ஸ்லே கூறுகையில், “ஒரு நபரோ அல்லது குடும்பமோ மருத்துவமனையில் தெளிவு, ஆதரவு மற்றும் நம்பிக்கையைத் தேடும் மனித வாழ்வின் ஒரு மிக முக்கியமான கட்டத்தில்தான் எங்களதுசேவைக்கான பணி தொடங்குகிறது என்பதை எம்.டி.இந்தியா-ல் நாங்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கிறோம். பொதுமக்களுக்குப் பரிவுமற்றும் பொறுப்புணர்வுடன் விரைவாக சேவை செய்வது எமது கடமை என்பதை நாங்கள் புரிந்து செயலாற்றி வருகிறோம். எங்களின் இந்தச் சென்னை விரிவாக்கம் என்பது புதிய அலுவலகம் அல்லது பெரிய அளவிலான செயல்பாடுகளைப் பற்றியது மட்டுமல்ல; மக்களுக்கு, மருத்துவமனைகளுக்கு மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு எப்போது மிகவும் தேவையோ, அப்போது நம்பகமான காப்பீடு கோரிக்கை மேலாண்மை செயல்பாடுகளை வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அருகிலேயே விரைவாக வழங்குவது என்ற குறிக்கோளை சார்ந்திருக்கிறது.”
உள்ளூர் பணியாளர்களை உருவாக்கி மேம்படுத்துவதும், சொந்த ஊரிலேயே நல்ல வருவாய் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் இந்த விரிவாக்க நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல சுகாதார மற்றும் கார்ப்பரேட் துறை நிபுணர்கள் சிறந்த வேலைவாய்ப்புகளுக்காக டெல்லி, மும்பை, பெங்களூரு அல்லது புனே போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. சென்னையில் இந்த விரிவாக்கத்தின் மூலம், உள்ளூர் நிபுணர்கள் தங்கள் சொந்த மாநிலத்திலேயே தங்கிப் பணியாற்றுவதற்கான சிறந்த வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதே எம்.டி.இந்தியா நிறுவனத்தின் நோக்கமாகும்.
விரைவில் செயல்பாடுகளை தொடங்கவிருக்கும் ‘சிறப்பு மையம்’ வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தென்னிந்தியா முழுவதும் மருத்துவச் சேவைகளை எளிதில் பெறுதல், செயல்திறன் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்குதல் ஆகியவற்றில் எம்.டி.இந்தியா-ன் நீண்டகால பொறுப்புறுதிக்கு இது சான்றாக திகழ்கிறது. தானியக்க செயல்பாடாக மருத்துவக் காப்பீடு கோரிக்கை மேலாண்மைக்கான எதிர்காலத் திட்டத்தை உருவாக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் சார்ந்த காப்பீடு கோரிக்கைக்கான தீர்வு அமைப்பைச் செயல்படுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டு அதில் முதலீடு செய்து வருகிறது.