மும்பை காவல் துறையில் பணியிலேயே இல்லாத 10 நபர்களை அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் ஊழியர்களாகப் போலி பதிவுகள் செய்து, ரூ.6.5 கோடி வரை மாதாந்திர சம்பளப் பணம் மோசடியாக வரவு வைக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இந்தச் சட்டவிரோத சம்பளப் பரிவர்த்தனைகள் பிரதானமாக டிசம்பர் 2019 முதல் பிப்ரவரி 2020 வரையிலும், பின்னர் ஜூன் முதல் செப்டம்பர் 2020 வரையிலான காலக்கட்டத்திலும் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இல்லாத நபர்களை உண்மையான காவலர்கள் போலக் காட்டி, அவர்களின் பெயர்களில் போலியான வருகைப் பதிவேடுகள் மற்றும் சேவைச் சான்றுகளை உருவாக்குவதற்கு நிர்வாகம் மற்றும் சம்பளப் பிரிவில் பணியாற்றும் எழுத்தர் நிலை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை கூட்டுச் சேர்ந்து ஒத்துழைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், இப் பிரம்மாண்ட நிதி மோசடி தொடர்பாகப் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.