Tamilசெய்திகள்

கே.எஸ்.ஆரை தூக்கிலிட்டாலும் அது தவறில்லை – முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தாக்கு

தெலுங்கானா ஆந்திர மாநிலத்துடன் ஒன்றாக இருந்தபோதிலும் விட, கே. சந்திரசேகர ராவ் ஆட்சிச் காலத்தில் நீர்ப்பாசன திட்டத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது. இதற்காக பி.ஆர்.எஸ். ஆட்சியில் நீர்ப்பாசன துறை அமைச்சர்களாக இருந்த சந்திரசேக ராவ் மற்றும் அவருடைய மருமகன் டி. ஹரிஷ் ராவ் ஆகியோர் தூக்கில் போட தகுதியானவர்கள் என தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆற்று நீர் பிரச்சினை தொடர்பாக, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என். உட்டம் குமார் ரெட்டி உருவாக்கப்பட்ட திட்டம் குறித்து விளக்கினார். அப்போது ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தில் அநீதிக்கு ஆளாக்கப்பட்டதால், தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. கிருஷ்ணா, கோதாவரி ஆற்று நீர் பயன்படுத்துதல் மற்றும் நிதி ஒதுக்குதல் ஆகியவற்றில் பி.ஆர்.எஸ். ஆட்சியில் மாநிலத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

நம்மைச் சுரண்டும் வெளியாட்களை நாம் விரட்டியடிப்போம், நம்மைச் சுரண்டும் நம் சொந்தப் பகுதி மக்களை உயிருடன் புதைப்போம் என்ற தெலுங்கானா கவிஞர் கலோஜி நாராயணா ராவின் கருத்து சுட்டிக் காட்டுகிறேன்.

பி.ஆர்.எஸ். ஆட்சிக் காலத்தில் தெலுங்கானா மாநில பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் ஆந்திர மாநில முதல்வர் என். கிரண் குமார் ரெட்டியின் நிலையை இருவரும் எதிரொலித்ததால், தெலுங்கானா மாநிலத்திற்கு மிகப்பெரிய தீமை.

கவிஞர் என்ன சொன்னரோ, அது இந்த இருவருக்கும் பொருந்தும். ஆற்று நீர் விவகாரங்களில் நடந்த அநீதிக்காக அவர்களைத் தூக்கிலிட்டாலும் அது தவறில்லை என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.

இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.