ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில் வசூல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி தொடர்பாக 2 வாரங்களில் பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமான வரி பாக்கி தொடர்பாக அனுப்பிய, நோட்டீசை எதிர்த்து ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
