மீண்டும் பணிநீக்கம் நடவடிக்கை – அமேசானின் 1600 ஊழியர்கள் நீக்கம்
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இயங்கி வரும் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அமேசான். இந்த நிறுவனத்தில் உலக அளவில் 3 லட்சத்துக்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபரில் அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களில் 10 சதவீதமான 30,000 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. அதன்படி, கடந்த அக்டோபரில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இது மற்ற நிறுவன ஊழியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமேசான் நிறுவனம் மீண்டும் ஒரு பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 16,000 ஊழியர்களை வரும் 27-ம் தேதி முதல் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே அமெரிக்காவில் பணிபுரியும் 2,000 பேருக்கு இ-மெயில் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அமேசான் வெப் சர்வீசஸ், ரீடைல், பிரைம் வீடியோ மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், சாப்ட்வேர் இன்ஜினியர் உள்ளிட்டோரும் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது. பொருளாதார நெருக்கடி, செயற்கை நுண்ணறிவு தாக்கம் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
