Tamilசெய்திகள்

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது – கனிமொழி எம்.பி

நெல்லையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மாவட்டம் தோறும் மக்களை சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறது. நெல்லையில் மக்கள் திரளாக வந்து மனுக்களை அளிப்பது சந்தோஷமாக உள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கை மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருப்பதை இது காட்டுகிறது. அடுத்ததாக அமையப் போவதும் தி.மு.க ஆட்சி தான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் மக்கள் தங்கள் கோரிக்கைகளை எங்களிடம் முன் வைக்கிறார்கள்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய ஒரே இயக்கம் தி.மு.க. தான் என்பதை மக்கள் அறிவார்கள். எங்கள் கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் நிச்சயமாக வந்து இணைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அது குறித்து எங்களின் தலைவர் மு.க ஸ்டாலின் தான் இறுதி முடிவை எடுப்பார்.

கருத்துக்கணிப்புகள் வந்தாலும் வராவிட்டாலும் தேர்தல் களம் தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக இருப்பதை எங்களால் கண்கூடாக பார்க்க முடிகிறது. மக்களின் பேராதரவு எங்களுக்கே இருக்கிறது. சமீபத்தில் ராகுல் காந்தி உடனான சந்திப்பு மிகவும் சுமூகமாக இருந்தது. காங்கிரஸ் இயக்கத்தோடு தி.மு.க. பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வருகிறது. எங்களுக்குள் எந்தவிதமான மோதல் போக்கும் இல்லை. கூட்டணி மிகவும் பலமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.