சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் கூட்டாளியாக இணையும் காவேரி மருத்துவமனை!
உயர்தர சிகிச்சையில் நேர்த்திக்கும், நோயாளிகளை மையமாகக் கொண்ட கனிவான சேவைக்கும் பெயர் பெற்ற முன்னணி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையான காவேரி மருத்துவமனை, புகழ்பெற்ற கிரிக்கெட் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் கூட்டாளியாக இணைவதை இன்று பெருமிதத்துடன் அறிவித்துள்ளது.
இந்த மதிப்புமிக்க கூட்டாண்மையானது, விளையாட்டு மருத்துவப் பிரிவு மற்றும் விளையாட்டு வீரர்களின் சிகிச்சை பராமரிப்பை மேலும் வலுப்படுத்தும் காவேரி மருத்துவமனையின் வெற்றிகரமான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.
விளையாட்டு மருத்துவத்தில் காவேரியின் நிபுணத்துவம் விளையாட்டு வீரர்களின் உடற்தகுதியை உறுதி செய்வதோடு, விளையாட்டின்போது ஏற்படும் காயங்களுக்குச் சிகிச்சையளிப்பதில் காவேரி மருத்துவமனை வலுவான நற்பெயரைக் கொண்டுள்ளது. மேம்பட்ட நோயறிதல், குறைந்தபட்ச ஊடுருவல் உள்ள நுண்துளை சிகிச்சை உத்திகள் மற்றும் சிறப்பான மறுவாழ்வு சிகிச்சை ஆகியவற்றை வழங்கும் நோக்கத்துடன், பிரத்யேக ‘விளையாட்டு மற்றும் ஆர்த்ரோஸ்கோபிக் மையத்தை’ இம்மருத்துவமனை தொடங்கியுள்ளது. காயங்களிலிருந்து விரைவான மீட்சியையும் சிறப்பான செயல்திறனையும் இம்மையம் உறுதி செய்கிறது.
அனுபவம் வாய்ந்த அவசர சிகிச்சை மருத்துவர்கள், விளையாட்டு மருத்துவ நிபுணர்கள், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் கதிரியக்க வல்லுநர்களை உள்ளடக்கிய பல்துறை மருத்துவக் குழுவே காவேரி மருத்துவமனையின் பலமாகும். மைதானத்தில் அவசரகால உதவி, துல்லியமான நோயறிதல் முதல் மேம்பட்ட சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வரை முழுமையான பராமரிப்பை இந்தக் குழு உறுதி செய்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ சுகாதார கூட்டாளியாக, வீரர்களின் உடல்நலம், உடற்தகுதி மற்றும் உச்சக்கட்ட செயல்திறனை உறுதி செய்வதில் காவேரி மருத்துவமனை முக்கியப் பங்கு வகிக்கும். இதில் மேம்பட்ட நோயறிதல், காயத் தடுப்பு நெறிமுறைகள், உடனடி மருத்துவ உதவி, தனிப்பயனாக்கப்பட்ட மறுவாழ்வுத் திட்டங்கள் மற்றும் போட்டிகள் நடைபெறும் காலம் முழுவதும் தொடர்ச்சியான மருத்துவ ஆதரவு ஆகியவை அடங்கும்.
இந்நிகழ்வில் பேசிய காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “விளையாட்டு மருத்துவம் என்பது இன்று காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பது என்ற நிலையைக் கடந்து, துல்லியமான சிகிச்சை மற்றும் உச்சக்கட்ட செயல்திறனை மீட்டெடுப்பது என்பதாக வளர்ச்சி கண்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான இந்தக் கூட்டாண்மை, விளையாட்டு வீரர்களுக்கு வேகம், துல்லியம் மற்றும் தொடர்ச்சியான பராமரிப்புடன் ஆதரவளிக்கும் எமது தயார் நிலையை வெளிப்படுத்துகிறது.” என்று குறிப்பிட்டார்.
இந்த இணைப்பு குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி திரு. கே.எஸ். விஸ்வநாதன் , “எங்களைப் பொறுத்தவரை, ஒரு மருத்துவக் கூட்டாளரைத் தேர்ந்தெடுப்பது என்பது அடிப்படை சுகாதார ஆதரவு என்பதைத் தாண்டியதாகும். இதற்கு உயர் அழுத்த விளையாட்டுச் சூழல்களைக் கையாள்வதில் ஆழமான நிபுணத்துவமும் நிரூபிக்கப்பட்ட அனுபவமும் தேவை. திறனும் அனுபவமும் ஒருங்கிணைந்த கலவையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குச் சரியான சுகாதார சேவை கூட்டாளியாக காவேரி மருத்துவமனையை ஆக்கியிருக்கிறது.”
நகர அளவிலான பல மாரத்தான் போட்டிகள், டென்னிஸ் போட்டிகள் மற்றும் பிரீமியர் கிரிக்கெட் நிகழ்வுகளுக்கு மருத்துவ சேவை வழங்கிய விரிவான அனுபவம் காவேரி மருத்துவமனைக்கு உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இந்த ஒத்துழைப்பு, சமூகங்கள் முழுவதும் உடற்தகுதி மற்றும் காயமில்லாத வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான காவேரி மருத்துவமனையின் பரந்த நோக்கத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
