பிரதமர் மோடிக்கு பரிசளிக்க 3 கிலோ வெள்ளி தாமரையை வடிவமைத்த பா.ஜ.க தொண்டர்!
மேற்கு வங்கத்தில் கடந்த 15 வருடங்களாக அசைக்க முடியாத முதல்வராக இருந்த மம்தா பானர்ஜியை வீழ்த்தி, தற்போதைய தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றுள்ளது. 293 தொகுதிகளில் 196 இடங்களை கைப்பற்றி முதல் முறையாக பா.ஜ.க ஆட்சி அமைக்க இருக்கிறது.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க-வுக்கு 15 வருடங்கள் ஆகிய நிலையில், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பா.ஜ.க தொண்டர் ஒருவர் 3 கிலோ வெள்ளியில் பா.ஜ.க-வின் சின்னமான தாமரையை வடிவமைத்து பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீ மாநிலம் ஜம்முவை சேர்ந்தவர் ரிங்கு சவுகான். இவர் பா.ஜ.க-வின் தொண்டர். நகைக்கடையும் வைத்துள்ளார். மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்தால் பிரதமர் மோடிக்கு பரிசு வழங்க வேண்டும் என 15 வருடங்கள் காத்திருந்த நிலையில், தற்போது அந்த காலம் அமைந்துள்ளது.
இது தொடர்பாக ரிங்கு சவுகான் கூறுகையில், “பெங்காலில் தாமரை மலர்வதற்காக 15 வருடங்கள் காத்திருந்தேன். இந்த வெற்றியை கவுரவிக்க இரவு பகலாக 3 கிலோ வெள்ளியில் தாமரையை வடிவமைத்துள்ளேன். இந்த தாமரை என்னைப் போன்ற தீவிர முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு கொண்ட பா.ஜ.க தொண்டர்களை பிரதிநிதிதுவம் படுத்தும். நாங்கள் பிரதமர் மோடிக்கு இதை பரிசாக வழங்க விரும்புகிறோம். இந்த வெற்றிக்குப் பின்னால் அவருடைய உத்வேகம் உள்ளது. கட்சி சின்னத்தை விட சிறந்தது எதுவும் இருக்க முடியாது.” என்றார்.
