வரலாற்றுச் சாதனை படைத்த ஹரியானா மாநிலத்தின் மூவர்ணக் கொடி பேரணி!
ஹரியானா மாநிலம் பல்வாலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 5,000 மீட்டர் (5 கி.மீ) நீளமும் 10 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட தேசியக் கொடியுடன் நடைபெற்ற ‘திரங்கா யாத்ரா’ (மூவர்ணக் கொடி பேரணி) பெரும் மக்கள் திரளுடன் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இந்த பிரம்மாண்டக் கொடியை ஒரு லாரியில் பொருத்தப்பட்ட சிறப்பு ரோலர் இயந்திரம் மூலம் சுருளவிழ்த்து ஏந்தியபடி, சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு மலர் தூவி உற்சாகமாகச் சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
