நேபாள வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளில் நீடிக்கும் சிக்கல்!
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நேபாள ராணுவம் மற்றும் காவல்துறை சுமார் 10,000 பணியாளர்களை ஈடுபடுத்தியுள்ளது. இருப்பினும், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்திருப்பதாலும், இடிபாடுகளை அகற்றுவதற்கான உபகரணங்கள் பற்றாக்குறையாக இருப்பதாலும் இப்பணிகளில் சிக்கல்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், அடையாளம் காணப்படாத உயிரிழந்தவர்களின் உடல்களைக் கூட்டு முறையில் அடக்கம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. சித்வான் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டில் சுமார் 200 உடல்கள் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் காவல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
உடல்கள் சிதைவடைந்த நிலையில் இருந்ததாலும், அவற்றை நகர்ப்பகுதிக்கு கொண்டு செல்வது மிகவும் கடினமாக இருந்ததாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
