Tamilசெய்திகள்

வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு மூலம் மக்களிடம் குறை கேக்கும் கிரண் பேடி

புதுச்சேரி ஆளுநர் மாளிகை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வரும் திங்கள் முதல் புதன்கிழமை வரை மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் மட்டுமே துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மக்களின் குறைகளை கேட்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்பாக இதற்காக ஆளுநர் மாளிகையின் தொலைபேசி எண்ணில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.