செய்திகள்

பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்த இந்தியா புதிய திட்டம்!

பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்த இந்தியா புதிய திட்டம்!பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்த இந்தியா புதிய திட்டம்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீவிரவாதிகளின்… Read More

பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 161 வது இடத்திற்கு சரிந்தது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 161 வது இடத்திற்கு சரிந்தது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்விபத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 161 வது இடத்திற்கு சரிந்தது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

பத்திரிகை சுதந்திரத்தில் உலகளவிலான பட்டியலில் இந்தியா 161 ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது… Read More

450 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் அறிவிப்பு!

450 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் அறிவிப்பு!450 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையே ராஜாங்க ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 450 கிலோமீட்டர் தூரம்… Read More

சொத்து வரி மீண்டும் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை – தமிழக அரசு மறுப்பு

சொத்து வரி மீண்டும் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை – தமிழக அரசு மறுப்புசொத்து வரி மீண்டும் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை – தமிழக அரசு மறுப்பு

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்… Read More

பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறந்த போராளி – ரஜினிகாந்த் புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறந்த போராளி – ரஜினிகாந்த் புகழாரம்பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறந்த போராளி – ரஜினிகாந்த் புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி என்று நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சர்வதேச ஒலி, ஒளி கருத்தரங்கு நடைபெற்றது. இதில், பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசினார். அப்போது அவர்," பஹல்காம் தாக்குதலால் பொழுதுபோக்கு நிகழ்வான இதில் மோடி பங்கேற்க மாட்டார் என சிலர் கூறினர். ஆனால், இந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கும் என்று நான் நம்பிக்கையுடன் இருந்தேன். ஜம்மு- காஷ்மீரில் அமைதியையும், நாட்டிற்கு பெருமையையும் பிரதமர் நரேந்திர மோடி நிச்சயம் கொண்டு வருவார். ஏனென்றால், பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி. இவ்வாறு அவர் கூறினார். Read More

ராகுல் காந்தி, ரேவந்த் ரெட்டி புகைப்படத்திற்கு பால் ஊற்றி கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள்!

ராகுல் காந்தி, ரேவந்த் ரெட்டி புகைப்படத்திற்கு பால் ஊற்றி கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள்!ராகுல் காந்தி, ரேவந்த் ரெட்டி புகைப்படத்திற்கு பால் ஊற்றி கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள்!

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மதியம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார். அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஏற்கனவே பீகார், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தொடர்ச்சியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வந்ததன் விளைவாக தான் மத்திய அரசு தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோரின் படங்களுக்கு பால் ஊற்றி கொண்டாடினர். Read More

ஞானசேகரன் வழக்கு சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது – தமிழக டிஜிபி அறிக்கை

ஞானசேகரன் வழக்கு சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது – தமிழக டிஜிபி அறிக்கைஞானசேகரன் வழக்கு சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது – தமிழக டிஜிபி அறிக்கை

அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில் ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது என்று உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை சமர்ப்பித்துள்ளார். ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு… Read More

மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம் பட்டியில் டோல்கேட் செயல்பட்டு வருகிறது. இதனை கடந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.… Read More

தருபுமரியில் 17 வயது சிறுவனை சாதி பெயரை சொல்லி கட்டி வைத்து தாக்கப்பட சம்பவம் – 4 பேர் மீது வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 17 வயது சிறுவனை சாதி பெயரை சொல்லி இரவு முழுவதும் கட்டி வைத்து அடித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. தென்கரைக்கோட்டையை சேர்ந்த… Read More

பாபா ராம் தேவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய டெல்லி உயர் நீதிமன்றம்!

ஹம்டாட் லேப் என்ற ஹோமியோபதி மருந்து நிறுவனம் ரூஹ் அஃப்சா என்ற சத்துபானத்தை தயாரித்து விற்று வருகிறது. இந்நிலையில் பதஞ்சலி நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம் தேவ் தங்கள் நிறுவன பானத்தை விளம்பரப்படுத்த வேண்டி சமீபத்தில் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பேசிய அவர், அஃப்சா பானம் விற்பனை மூலம் வரும் லாபத்தை மசூதியும் மதரசா கட்டவே பயன்படுத்துவார்கள் என பேசிய ராம்தேவ், இது லவ் ஜிகாத் போல சர்பத் ஜிகாத் என்று கூறினார். இந்நிலையில் ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரத்தை எதிர்த்து ஹம்டாட் லேப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அமித் பன்சால் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹம்தர்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இந்த விவகாரம் அவமானகரமானது. இது ஒரு வெறுக்கத்தக்க பேச்சு. இது வகுப்புவாத பிளவை உருவாக்குகிறது என்று தெரிவித்தார். அப்போது பேசிய நீதிபதி, "இந்த விவகாரம் நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. இது நியாயமல்ல" என்று பாபா ராமதேவ் வழக்கறிஞரை நோக்கி காட்டமாக தெரிவித்தார். இதன்பின் பேசிய ராம்தேவின் வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் சர்ச்சைக்குரிய அறிக்கைகள் தொடர்பான அனைத்து அச்சு அல்லது வீடியோ வடிவ விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடக இடுகைகளை உடனடியாக நீக்குவதாக தெரிவித்தார். இந்நிலையில், ரூஹ் அஃப்சா என்ற சத்துபானம் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பாபா ராம்தேவ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில், "உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த போதிலும், அவர் (பாபா ராம்தேவ்) யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. அவர் தனி உலகில் வாழ்கிறார்" என்று நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.… Read More