Tamilசெய்திகள்

சுதந்திர தின விடுமுறை – சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை-செங்கோட்டை சிறப்பு ரயில்( 06089) ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு 09.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் என்றும் நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில் (06012) ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.