சொத்து வரி மீண்டும் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை – தமிழக அரசு மறுப்பு
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை.
* சொத்து வரி 6% உயர்த்தப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
* கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டது. செப்டம்பர் மாதத்திற்கு பிறகு சொத்து வரி உயர்த்தப்படவில்லை.
* எந்தவித அறிவிப்பும் இன்றி சொத்து வரி உயர்வு என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளது.