Tamilசெய்திகள்

சி.பி.ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடி சந்திப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநில ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேசிய ஜனநாயக கட்சி தலைவர்கள் ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று மதியம் பிரதமர் மோடி சந்தித்தார்.

துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வருகிற 21ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.