Tamilசெய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்!

சென்னை, கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

4 வது முறையாக கொளத்தூர் தொகுதியில் இருக்கக்கூடிய வாக்காளர் பெருமக்கள், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக நிற்கப்பட்டிருக்ககூடிய என்னை அமோகமான வாக்கு வித்தியாசத்தில் கொளத்தூர் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

திமுக கூட்டணி எப்போதும் போல் வலுவாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.