ரூ.1,876.16 கோடி செலவிலான புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் சார்பில் மொத்தம் ரூ.1,876.16 கோடி செலவிலான கட்டிடங்களை திறந்து வைத்து, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் ரூ.14.50 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.348 கோடியே 59 லட்சம் செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டிடங்கள், நுண்ணுயிரியல் ஆய்வுக் கூடங்கள், இந்திய மற்றும் ஓமியோபதி பிரிவுக் கட்டடங்கள், நகர்ப்புற, கிராமப்புற மற்றும் பல்வேறு சுகாதார நிலையக் கட்டிடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மருத்துவ மனை தற்போது ரூ.25 கோடி செலவில் தரை மற்றும் 5 தளங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தற்போது 45 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தற்போது ரூ.30 கோடியே 35 லட்சம் செலவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை, ராஜபாளையம் அரசு மருத்துவமனை தற்போது 40 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் 4 தளங்களுடன் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை, கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனை தற்போது ரூ.40 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை, காங்கேயம் அரசு மருத்துவமனை தற்போது ரூ.12 கோடி செலவில் தரை மற்றும் 3 தளங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள தாய்-சேய் நலப்பிரிவு கட்டடம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 6 கோடியே 62 லட்சம் செலவிலான குடிநீர் வழங்கும் திட்டம் என மொத்தம் ரூ.208 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்ட 6 மருத்துவமனைகள் அடங்கும்.
குத்தாலம், ஜல்லிப்பட்டி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தாய்சேய் நலப்பிரிவு, கம்பம் அரசு மருத்துவமனையில் தாய்சேய் நலப்பிரிவு, பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம், வேப்பூர், வேப்பூர், விருத்தாசலம் மற்றும் பண்ருட்டி, கும்மிடிப்பூண்டி, கிருஷ்ணாபுரம், முசிறி மற்றும் ஆலங்குளம் ஆகிய 14 அரசு மருத்துவமனைகளில் ரூ.72 கோடியே 90 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை, கிண்டி உணவு பகுப்பாய்வு கூட வளாகத்தில் ரூ.9 கோடியே 91 லட்சம் செலவில் புதிய கட்டிடம் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடம், மதுரை உணவு பகுப்பாய்வு கூட வளாகத்தில் ரூ.4 கோடியே 63 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நுண்ணுயிரியல் ஆய்வுக் கூடம், ரூ.75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நாமக்கல் மண்டலத்திற்கான மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குநர் அலுவலகக் கட்டிடம் என மொத்தம் ரூ.15 கோடியே 29 லட்சம் செலவில் கட்டப் பட்டுள்ள கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சித்தா மருத்துவப் பிரிவு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை வளாகத்தில் ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் செல வில் அமைக்கப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு, ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சித்தா மருத்துவப் பிரிவு, திருவிதாங்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள யுனானி மருத்துவப் பிரிவு, திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு, திருவிழிமிழலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் ரூபாய் அமைக்கப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு, கெரடாமட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் ரூபாய் அமைக்கப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு, செங்கல்பட்டில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் மருத்துவப் பயனாளிகள் கட்டணப் பிரிவு என மொத்தம் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி பிரிவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் பதுவஞ்சேரி, கடலூர் மாவட்டம் விருதாச்சலம், அறந்தாங்கி, காட்டூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 3 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்கள்; கிருஷ்ணாபுரம், சேங்கல், தாமரங்கோட்டை, மம்சாபுரம் ஆகிய இடங்களில் கட்டப் பட்டுள்ள 5 கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள்;
அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், மயி லாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை,ராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 98 பல்வேறு சுகாதார நிலையக் கட்டிடங்கள், என மொத்தம் ரூ.48 கோடியே 43 லட்சம் செலவிலான கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
