Tamilசெய்திகள்

சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகளின் விபரம் அறிவிப்பு

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (07.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அதன்படி, எம்கேபி நகர்: திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலயன்புரி தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை மெயின் ரோடு, மைக்ரோ எஸ்டேட், பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், தோஷி, காசா கிராண்ட், பாம் ரிவேரா, தரமணி ஏரியா, கண்ணகம், பெரியார் நகர், திருவான்மியூர் மற்றும் இந்திரா நகர், எம்.ஜி.ஆர். நகர், வேளச்சேரி ஏரியா, 100 அடி சாலையின் ஒரு பகுதி, அண்ணா நகர், Csir சாலை, காந்தி நகர்.

ஆகிய பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும்.