Tamilசெய்திகள்

விக்கிரவாண்டியில் விவசாயி அடித்து கொலை!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆவுடையார் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன் மற்றும் ஜான்சன். இருவரும் விவசாயிகள். இருவருக்கும் இடையில் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஜான்சன் குமரனை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் குமார் படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளா். அவரது உடலை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் வந்தது. அப்போது குமரன் உறவினர்கள் ஆம்புலன்சில் உடலை உடலை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

குற்றவாளி ஜான்சனை கைது செய்யும் வரை உடலை எடுத்து செல்ல விடமாட்டோம் என ஆம்புலன்சை முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.