Tamilசெய்திகள்

மும்பையில் கனமழை – வெள்ள பெருக்கால் மக்கள் அவதி

மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

இதனால் மும்பையில் பல இடங்களில் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. அந்தேரி மேற்கு, வீர தேசாய் சாலையில் 1 அடிக்கும் மேல் நீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. மேலும் மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.