திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேர்தல் பணிகளில் அயராது உழைத்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட அம்மன் நகரில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில், தேர்தல் நேரத்தில் ஓய் உறக்கமின்றி ‘பம்பரமாக’ சுழன்று பணியாற்றிய தெற்கு மாவட்ட மற்றும் திருவெறும்பூர் தொகுதி நிர்வாகிகள் அனைவருக்கும் அமைச்சர் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைப் பகிர்ந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முகவர்களை (Counting Agents) முறையாக நியமிக்கவும், வாக்கு எண்ணிக்கை அன்று மிகுந்த கவனத்துடன் பணிகளை மேற்கொள்ளவும் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில் மாநகர செயலாளர் மு. மதிவாணன் அணி நிர்வாகி ம, செந்தில் மற்றும் மாநகர, பகுதி, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள்.பிரதிநிதிகள்: பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தேர்தல் களத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தொண்டர்களுக்கு ஊக்கமளித்த அமைச்சர், அடுத்தகட்டமாக வாக்கு எண்ணிக்கை பணிகளில் விழிப்புடன் செயல்பட அழைப்பு விடுத்துள்ளார்.