ஜி.கே.மணி போன்றோர் மனிதர்களாக இருக்கவே தகுதி இல்லாத நபர்கள் – அன்புமணி ராமதாஸ் தாக்கு
மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது:
* என்னை தலைவராக்கிய அடுத்த நாளில் ஜி.கே.மணி சூழ்ச்சியை ஆரம்பித்து விட்டார்.
* சூழ்ச்சி செய்து அப்பா-பிள்ளையை பிரித்தது ஜி.கே.மணிதான்.
* ஜி.கே.மணி போன்றோர் மனிதர்களாக இருக்கவே தகுதி இல்லாத நபர்கள்.
* டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பு தோற்றுவிட்டது, ஆனால் வெற்றி பெற்றதாக ராமதாசிடம் பொய் சொல்லி உள்ளனர்.
* அருள், ஜி.கே.மணி போன்றோர் சொல்லும் பொய்களை பா.ம.க.வினர் நம்ப வேண்டாம்.
* அய்யா ராமதாஸ் பெயரில் வரும் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அவருக்கே தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
