கடத்தலை தவிர்க்க ட்ரோன் எதிர்ப்பு சிஸ்டத்தை தொடங்கிய பஞ்சாப் அரசு
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் 553 கி.மீ. தூரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது. இந்த எல்லை வழியாக ஆயுதங்கள், போதைப்பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக டிரோன் மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து பறக்கவிடப்படும் டிரோன், இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்களை போட்டுவிடும். அதை ஏஜென்ட்கள் எடுத்து மற்ற இடத்திற்கு கடத்துவது வழக்கமாகி வருகிறது.
இதை தடுக்க பஞ்சாப் மாநில அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் டிரோன் எதிர்ப்பு சிஸ்டத்தை (Baaz Akh) பஞ்சாப் அரசு தொடங்கியுள்ளது. எல்லை பாதுகாப்பு படையு ஒத்துழைப்புடன் இந்த சிஸ்டம் செயல்படும். பாகிஸ்தான் எல்லையில் இருந்து டிரோன்கள் பறந்து வந்தாலு, இந்த சிஸ்டம் அவற்றை தாக்கி அழிக்கும்.
இந்த சிஸ்டத்தை பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
